×

மேலூர் அருகே கோயில் திருவிழா இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

மேலூர், அக். 2: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. மேலூர் அருகே அ.வல்லாளபட்டி, நாகரம்மாள் இளமநாயகி அம்மன் கோயில் பால்குட உற்சவ விழாவை முன்னிட்டு, 7ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. அ.வல்லாளபட்டி முதல் அழகர்கோவில் வரை நடைபெற்ற பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 11 ஜோடிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் காளைகள் பெற்றன. அ.வல்லாளபட்டி ஏஆர்கே, அரியப்பன்பட்டி தினகரசாமி ஹரிஷ், அவனியாபுரம் மோகன்சாமி ஆகியோரின் காளைகள் அடுத்தடுத்த பரிசுகளை பெற்றன.

சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் மொத்தம் 21 ஜோடிகள் கலந்து கொண்டன. இதனால், இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. முதல் சுற்றில், முதல் பரிசை திண்டுக்கல் மோகன்ராம் காளைகள் பெற்றன. புலிமலைப்பட்டி சிவதர்ஷன், கோம்பை சாமுவேல், அ.வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன் ஆகியோர் காளைகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இரண்டாம் சுற்றில் அ.வல்லாளபட்டி தினகரசாமி ஷரீஷ் காளைகள் வெற்றி இலக்கை முதலில் அடைந்தன.

வல்லாளபட்டி கக்கப்பன், மேலூர் சிக்கி செல்வமகள் மதிக்சா, அ.வல்லாளபட்டி ஏஆர்கே ஆகியோரின் காளைகள் அடுத்தடுத்து எல்லையை தொட்டன. வெற்றி பெற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

The post மேலூர் அருகே கோயில் திருவிழா இரட்டை மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Temple Festival Double Bullock Race ,Melur ,bullock ,A. Vallapatti ,Temple festival double cart race ,Dinakaran ,
× RELATED அரசினர் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம்